நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே

 ✨✨✨✨✨✨✨✨

படம்:காதல் ஓவியம்

இசை:இளையராஜா

பாடியவர்:S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨

தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம்

பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

ஓலையில் வெறென்ன சேதி தேவனே நானுந்தன் பாதி

இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே

உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்

பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்

பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே


நாதம் என் ஜீவனே

அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே

விலகிப்போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே

கண்களில் மௌனமோ கோவில் தீபமே

ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே

மார் மீது பூவாகி விழவா

விழியாகி விடவா

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்

பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

இசையை அருந்தும் சாதகப்பறவை போலே நானும் வாழ்கிறேன்

உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்

தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்

நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்

வெண்ணீரில் நீராடும் கமலம்

விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்

பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்