என்னைப் பாட வைத்தவன் ஒருவன் - என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அரச கட்டளை

இசை: K.V.மகாதேவன்

வரிகள்:வாலி

பாடியவர்:P.சுசீலா

ஆண்டு:1967

✨✨✨✨✨✨✨✨✨

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்


அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்

அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்

குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்

நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்

அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்

அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்

நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்