சின்னப்பயலே சின்னப்பயலே சேதி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : அரசிளங்குமரி

பாடியவர்: டி எம் சௌந்திரராஜன்

எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இசை: ஜி .ராமனாதன்

✨✨✨✨✨✨✨✨✨

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா

நீ எண்ணிப் பாரடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி

உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

(சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா)

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா

தம்பி மனதில் வையடா

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா

நீ வலது கையடா

தனி உடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா

நீ தொண்டு செய்யடா

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா

எல்லாம் பழைய பொய்யடா 

(சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா)


வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு

விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க - உந்தன்

வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூலையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே

நீ வெம்பி விடாதே  

(சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்