பூந்தென்றலும் வந்தது தாளமும் தந்தது மந்திரச் சிந்துகள்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பகலில் பௌர்ணமி

ஆண்டு:1990

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை : இளையராஜா

வரிகள்:வாலி

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : பூந்தென்றலும் வந்தது

தாளமும் தந்தது

மந்திரச் சிந்துகள் பாட

தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் : பூந்தென்றலும் வந்தது

தாளமும் தந்தது

மந்திரச் சிந்துகள் பாட

தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் : கும்மாளம்தான் காணும்

பொன்னான நாளு

எல்லாரும்தான் இங்கே

ஒண்ணான நாளு

நல்லா வாழ வேணும்

எந்நாளும்தான் நீங்க

இப்போ இந்த நேரம்

பொன்னானது தாங்க

ஆண் : பூந்தென்றலும் வந்தது

தாளமும் தந்தது

மந்திரச் சிந்துகள் பாட

தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் : பூந்தென்றலும் வந்தது

தாளமும் தந்தது

மந்திரச் சிந்துகள் பாட

தினம் மங்கள தாளங்கள் போட

ஹோ ஹோ ஹோய்……

ஆண் : சிரிக்கிற நல்ல மனசு

சின்னஞ்சிறு பிள்ளை மனசு

என்னுடைய அண்ணன் மனசு

எப்பவுமே ரொம்பப் பெருசு

கொடுக்குற அண்ணி மனசு

கும்பிடுற அம்மன் மனசு

இருக்கணும் ரெண்டு மனசு

இன்னும் ஒரு நூறு வயசு

ஆண் : அண்ணாச்சி உங்களுக்கு

மாலை இட்ட அம்மாளு

கல்யாணம் கட்டிக் கொண்ட

இந்நாளுதான் பொன்னாளு

சங்கீதம் பொங்கி வர

பாட்டெடுக்கும் நான்தானே

சந்தோஷ வெள்ளத்திலே

நீச்சலிடும் மீன்தானே

ஆண் : பெத்தெடுத்த தாயை

பாத்ததில்ல நானும்

இங்கே காணும் பாசம்

எல்லாத்துக்கும் மேலே

எந்த நாளும் வாழும்

சங்கத் தமிழ் போலே

ஆண் : பூந்தென்றலும் வந்தது

தாளமும் தந்தது

மந்திரச் சிந்துகள் பாட

தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் : கும்மாளம்தான் காணும்

பொன்னான நாளு

எல்லாரும்தான் இங்கே

ஒண்ணான நாளு

நல்லா வாழ வேணும்

எந்நாளும்தான் நீங்க

இப்போ இந்த நேரம்

பொன்னானது தாங்க

ஆண் : பறக்குற சிட்டுக் குருவி

பாய்கிற வெள்ளி அருவி

தினம் உன்னை தொட்டுத் தழுவி

மகிழட்டும் இந்தப் பிறவி

பெண் : மடியினில் சுமக்கவில்லை

மனதினில் சுமந்த பிள்ளை

இனி ஒரு கவலை இல்லை

இவள் ஒரு மலடி இல்லை

ஆண் : எந்நாளும் எங்கள் உள்ளம்

வந்தாடுதே உன்னோடு

கண்ணா உன் முன்னேற்றம்தான்

என்றும் எங்கள் கண்ணோடு

பெண் : வாங்காத பேரை எல்லாம்

வாங்கு எந்தன் ராஜாவே

தாயாக நானும் உன்னை

தாலாட்டினேன் ரோஜாவே

ஆண் : பெத்தெடுத்த தாயை

பார்த்ததில்ல நீ

பெண் : இங்கே காணும் பாசம்

எல்லாத்துக்கும் மேலே

ஆண் : எந்த நாளும் வாழும்

சங்கத் தமிழ் போலே

பெண் : பூந்தென்றலும் வந்தது

தாளமும் தந்தது

மந்திரச் சிந்துகள் பாட

தினம் மங்கள தாளங்கள் போட

ஆண் : பூந்தென்றலும் வந்தது

தாளமும் தந்தது

மந்திரச் சிந்துகள் பாட

தினம் மங்கள தாளங்கள் போட

பெண் : கும்மாளம்தான் காணும்

பொன்னான நாளு

ஆண் : எல்லாரும்தான் இங்கே

ஒண்ணான நாளு

பெண் : நல்லா வாழ வேணும்

எந்நாளும்தான் நீங்க

ஆண் : இப்போ இந்த நேரம்

பொன்னானது தாங்க

இருவர் : நல்லா வாழ வேணும்

எந்நாளும்தான் நீங்க

இப்போ இந்த நேரம்

பொன்னானது தாங்க

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்