கண் மலர்களின் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ்

 ✨✨✨✨✨✨✨✨

படம்: தைப்பொங்கல்

ஆண்டு:1980

வரிகள்:வல்லபன்

இசை: இளையராஜா

பாடியவர்கள் : இளையராஜா & S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨✨

ஆண்: கண் மலர்களின் அழைப்பிதழ்

பொன் இதழ்களின் சிறப்பிதழ்(2)

இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான் காண்போமே சேர்ந்தே நாமே

கண் மலர்களின் அழைப்பிதழ்

பொன் இதழ்களின் சிறப்பிதழ்

பெண்: நானாளும் மனம் பூவோ

நீ நாளும் தமிழ் பாவோ

ஆண்: பூவாடும் விழி தானோ

நீ பாட மொழி ஏனோ

பெண்: என்ன இன்று (ஆண்: ஆஹா)

கண்ணில் என்னை வென்று (

ஆண்: ஆஹா)

கன்னம் எண்ணுவதோ

ஆண்: எனக்கென ஒரு கனமோ

விளக்கங்கள் தரும் மனமோ

நமக்கென விழித்திடும் மலர்களோ மனங்களோ

பெண்: கண் மலர்களின் அழைப்பிதழ்

ஆண்: லலல லலலா

பெண்: பொன் இதழ்களின் சிறப்பிதழ்

ஆண்: லல லலலா

ஆண்: தாம்பூல நிறம் தானே

மாம்பூவின் இளமேனி

பெண்: ஆஆ தாங்காது இனி மேலே

தூங்காது மனம் நாளை

ஆண்: கண்ணில் என்ன (பெண்: லால)

மின்னல் கண்ட பின்னும் (பெண்: லால)

இன்னும் மின்னுவதோ

பெண்: உனக்கென்று ஒரு மனமோ

நமக்கென்று திருமணமோ

மயக்கமோ

ஆண்: கண் மலர்களின் அழைப்பிதழ்

பெண்: லல லலா லல லலா

ஆண்: பொன் இதழ்களின் சிறப்பிதழ்

பெண்: லல லலா லல லலா

பெண்: இனி வரும் இரவுகள் இளமையின்

கனவுகள் தான் 

இருவரும்: காண்போமே சேர்ந்தே நாமே

பெண்: லலலல லல லலா

ஆண்: லலல லலலா

பெண்: லலலல லல லலா

ஆண்: லலல லலலா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்