அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தலைவாசல்

இசை:பாலபாரதி

பாடியவர்:S.ஜானகி

ஆண்டு:1992

✨✨✨✨✨✨✨✨✨

ஆஆஆஆஆஆஆஆ..ஆஆஆஆ.

அதிகாலை காற்றே நில்லு

இதமான பாடல் சொல்லு

இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே

இது ஒரு புது சுகமே

அதிகாலை காற்றே நில்லு

இதமான பாடல் சொல்லு

இளமையின் அலைகளில்

பருவமும் மிதந்தது

இமைகளின் அசைவினில்

உலகமும் பணிந்தது

ஓ .. காலை மேகம் சோலை ஆகும்

வானம் எங்கள் சாலை ஆகும்

தாமரை கொடை விரிக்கும்

அதிகாலை காற்றே நில்லு

இதமான பாடல் சொல்லு.

மலரினம் சிரித்திட

திசைகளும் எழுந்தது

பொழுதுகள் விடிந்திட

தவங்களும் புரிந்தது

ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும்

பாதம் வந்தே கோலம் போடும்

காவியம் தலை வணங்கும்

அதிகாலை காற்றே நில்லு

இதமான பாடல் சொல்லு

இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே

இது ஒரு புது சுகமே..

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்