கரையோர காற்று கல்யாண வாழ்த்து

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : பகலில் பௌர்ணமி 

பாடல்: கங்கை அமரன் 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : கரையோர காற்று

கல்யாண வாழ்த்து

காதோடுதான் கூறுதோ

லல லாலா லா லல லாலா லா

லல லாலா லா லல லாலா லா


குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ

ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ


ஆண் : கரையோர காற்று

கல்யாண வாழ்த்து

காதோடுதான் கூறுதோ…


பெண் : கரையோர காற்று

கல்யாண வாழ்த்து

காதோடுதான் கூறுதோ…


குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ

ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ


ஆண் : தினம் தூது போகும் மேகம்

பனி தூறல் போடுதோ

பெண் : ஒரு தேவன் தேவியாக

இரு ஜீவன் கூடுதோ


ஆண் : கரையோர காற்று

கல்யாண வாழ்த்து


ஆண் : வானவில் தானொரு

வஞ்சியாய் வந்தாடுதோ

வாலிபம் வாடிட

நெஞ்சையே பந்தாடுதோ


பெண் : ஐவகை அம்புகள்

பார்வையில் உண்டானதோ

மார்பிலே பாய்ந்தாடும்

மோகங்கள் கொண்டாடுதோ


ஆண் : மடி ஊஞ்சலில்

பெண் : மணிகிளிகள் இரண்டும்

ஆண் : உறவாடலாம்

பெண் : மது ரசங்கள் இதழில்

ஆண் : வழிந்தோடலாம்

பெண் : ஒரு கவிதை இரவில்

ஆண் : அரங்கேறலாம்

பெண் : அதை பயிலும் பொழுதில்


குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ

ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ


இருவர்  : சுகம்


ஆண் : தான் கூடலாம்

நூலிடை வாடலாம்

பெண் : நாள் வாய்க்குதோ

தோகை மயில்

தோளில் சாய்ந்தாட


ஆண் : கரையோர காற்று

கல்யாண வாழ்த்து


பெண் : ஆரம்பம் ஆனதே

ஆசையின் ஆராதனை

ஆடையால் மூடினால் போகுமா பூவாசனை


ஆண் : நாணமே ஓய்வெடு

காதலன் கை தீண்டினால்

ராத்திரி வேளையில்

தாமரை கை ஏந்தினாள்


பெண் : விரல் தீண்டினால்

ஆண் : இதழ் சிவந்து சிரிக்கும்

பெண் : வெண்தாமரை

ஆண் : அதன் புருவம் இரண்டும்

பெண் : திறக்கும் திரை

ஆண் : உனை நெருங்கி இருக்கும்

பெண் : நெடுநாள் வரை

ஆண் : தினம் பறிக்க மணக்கும்


இருவர் : பனிவாய்

பெண் : பூச்சரம் ததும்பிடும் தேன்குடம்

ஆண் : நான் ஏந்தலாம் மேலும் கீழும்

மேனி தள்ளாட


பெண் : கரையோர காற்று

கல்யாண வாழ்த்து

ஆண் : காதோடுதான் கூறுதோ…


பெண் : தினம் தூது போகும் மேகம்

பனி தூறல் போடுதோ

ஆண் : ஒரு தேவன் தேவியாக

இரு ஜீவன் கூடுதோ


பெண் : 

லால்லா லாலா ல

லால்லா லாலா ல

ஆண் : லால்லா லாலா ல

லால்லா லாலா 

✨✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்