ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்துப் போக ✨

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அமர காவியம்

இசை:கிப்ரன்

ஆண்டு:2014

வரிகள்:பார்வதி

பாடியவர்கள்:

ஹரிசரண்

பத்மலதா

✨✨✨✨✨✨✨✨✨

ஏதேதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்துப் போக

ஏதேதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்துப் போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்

நான் ஓதும் வேதம் ஆக

என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா

தோல் தொட்டால் வானில் நீந்தி செல்லவா

தேன்துளி பேச்சில் சேர்த்தாய்

தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஏதேதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்துப் போக

உன்னைத் தொட்டு வந்த பின்னால்

காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்

வாசம் வண்ணம் பூசிக்கொண்டு

தென்றல் வந்து நிற்கக் கண்டேன்

போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்

மீண்டும் திறந்து செல்வோம்

பயணம் அங்கே முடிந்தால் என்ன

உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை

ஏதேதோ எண்ணம் வந்து ஒ...

என் நெஞ்சை தைத்துப் போக..

தோளில் மெல்ல சாயும் முடி

பூக்கும் புது தொப்புள் கொடி

தாகம் கொண்டு உள்ளம் வந்தால்

தீர்வை தரும் அன்னை மடி

அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும்

பந்தம் எல்லாமே ஆனாயே நீயே

உயிரின் தடம் வழியும் முன்னால்

உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன்

ஏதேதோ எண்ணம் வந்து

ஏதேதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

என் நெஞ்சை தைத்து போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்

நான் ஓதும் வேதம் ஆக

என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா

தோல் தொட்டால் வானில் நீந்தி செல்லவா

தேன்துளி பேச்சில் சேர்த்தாய்

தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்