அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

 ✨✨✨✨✨✨✨✨✨

வெப் சீரிஸ் ஆல்பம்: நாம் 

ஆண்டு:2021

இசை &பாடியவர் :ஸ்டீஃபன் ஃசெக்காரியா

வரிகள்:சூர்யவேலன்

✨✨✨✨✨✨✨✨✨

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்

என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்

என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

ஏன் எனது இதயம்

துடிக்கும் இசையில்

கவிதை ஒன்றை எழுதினாய்

அதை விழியில் கோர்த்து

உயிரின் உள்ளே

பார்வையாலே சொல்கிறாய்

உன்னோடு நானும் வாழ

உன்னோடு நானும் சாக

உன் மடி சாயவா

உன் மடி சாயவா

உன் பார்வை என்னை கொல்ல

சாய்ந்தேனே நானும் மெல்ல

நீ தான் என் மன்னவா

நீ தான் என் மன்னவா

ஓ உனது சிரிப்பினில் சிதரும் அழகினை

பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

வேர்வை துளிகளும் தீர்த்தம் போல

என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

இருவர் வாழும் உலகிலே

உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே

இருவர் தீயும் நிலவிலே

நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே

அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்

இறகை போல பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்.

உன் பார்வை என்னை கொல்ல

சாய்ந்தேனே நானும் மெல்ல

நீ தான் என் மன்னவா

நீ தான் என் மன்னவா

உன்னோடு நானும் வாழ

உன்னோடு நானும் சாக

உன் மடி சாயவா

உன் மடி சாயவா

 அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

எனது பிறவியின் அர்த்தம் உணரவே

உன்னை எனது வாழ்வில்  தந்ததோ

தேகம் தீண்டும் தூரம் இருந்துமே

உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

மழையில் காதல் மடியிலே

நித்தம் அணைத்து கொல்லிடு உயிரிலே

விழிகள் பேசும் மொழியிலே

இனி மெளனம் கூட பிழை இல்லை

அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்

இறகைப் போல பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்

என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

நீ இரவல் உயிரா

உறவின் வெயிலா

மழையின் வாசம் நீயடி

நீ கவிதை மொழியா

கவிஞன் வழியா

உயிரின் ஸ்வாசம் நீயடி

உன்னோடு நானும் வாழ

உன்னோடு நானும் சாக

உன் மடி சாயவா

உன் மடி சாயவா

உன் பார்வை என்னை கொல்ல

சாய்ந்தேனே நானும் மெல்ல

நீ தான் என் மன்னவா

நீ தான் என் மன்னவா

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்