மந்திரம் சொன்னேன் வந்துவிடு சம்மதம் எங்கே தந்துவிடு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: வேதம் புதிது

இசை:தேவேந்திரன்

பாடியவர்கள்: மனோ,      S. ஜானகி

ஆண்டு:1987

✨✨✨✨✨✨✨✨✨

மந்திரம் சொன்னேன் வந்துவிடு

சம்மதம் எங்கே தந்துவிடு

புதிய பாடம் சொல்வேனே

அதன் பொருளை சொல்வாய் செந்தேனே

புதிய பாடம் சொல்வேனே

அதன் பொருளை சொல்வாய் செந்தேனே

பாதம் பார்த்து வேதம் சொல்ல

ஆற்றங்கரைக்கு வந்தேனே

மந்திரம் சொன்னேன் வந்துவிடு

சம்மதம் எங்கே தந்துவிடு

கண்மணி உனக்கொன்னு

தெரியுமா

அந்த இடுப்பில் இருக்குது

என் மனசு

என் மனம் உனக்கென்ன

புரியுமா

தண்ணி குடத்தில் துடிக்குது

என் உயிரு

நீ குளித்தால்

நதியில் மணம் இருக்கும்

நீ ரசித்தால்

கவியின் குணம் இருக்கும்

வந்து விட்டேன்

மெல்ல மெல்ல

தந்து விட்டேன்

என்ன சொல்ல

பாவம் அல்ல

வேதங்கள் தடை அல்ல

மந்திரம் சொன்னேன் வந்துவிடு

சம்மதம் எங்கே தந்துவிடு

பொருத்தம் நமக்குள்

இல்லை என்று

நீ நினைத்ததுண்டோ

நெஞ்சுக்குள்ள

தாமிரபரணி

ஆத்து தண்ணி

அது ஜாதி பேதம்

பார்ப்பதில்லை

நீ நினைத்தால்

திருநீர் அணிந்திருப்பேன்

நீ தடுத்தால்

கோயில் மறந்திருப்பேன்

தொட்டதெல்லாம் வெற்றியடி

வெற்றி

கண்டாள் அள்ளிக்கொடி

கட்டிப்பிடி

காதல் வேதம்

கற்பிக்கவா

காதில் வந்து ஒப்பிக்கவா

காதல் என்னை அழைக்குது

எங்கள் வேதம் என்னை தடுக்குது

காதல் பெரிதா

வேதம் பெரிதா

காதல்தானே ஜெயித்தது

மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்

சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள்

காலம் நேரம் பாராமல்

பிறர் கண்கள் ஏதும் காணாமல்

காலம் நேரம் பாராமல்

பிறர் கண்கள் ஏதும் காணாமல்

ஆற்று மண்ணில் பேரை எழுதி

அழகு பார்ப்போம் அன்பே வா

அழகு பார்ப்போம் அன்பே வா

அழகு பார்ப்போம் அன்பே வா

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்