உன் பார்வையில் ஓராயிரம்

 ✨✨✨✨✨✨✨✨

படம்:அம்மன் கோயில் கிழக்காலே

ஆண்டு:1986

பாடியவர்: K.J.யேசுதாஸ் 

வரிகள்:கங்கை அமரன்

இசை:இளையராஜா

✨✨✨✨✨✨✨✨

உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்

இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்

இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து இருந்து பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அணைத்து நனைந்தது தலையணை தான்

அடுத்த அடி என்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கெனத் தான்

இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன்

நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகச்சிறை இருப்பாயோ

இருந்து விருந்து மனம் இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்