ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு

 ✨✨✨✨✨✨✨✨✨

இன்று மலேசியா வாசுதேவன் அவர்கள் பிறந்த நாள்

✨✨✨✨✨✨✨✨✨

படம்: அரண்மனை கிளி  (1993)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், அருண்மொழி, மின்மினி

பாடல்வரிகள்: வாலி

✨✨✨✨✨✨✨✨✨

ராத்திரியில் பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு

ஆத்தங்கரை ஈரக்காத்து 

மேலே பட்டு மோகம் ஆச்சு

போடு நிலாச்சோறு 

என் பொன்னுமணி தேரு

கூட வந்து சேரு 

நான் சொட்டும் கனிச்சாறு

ஹோ... ராத்திரியில் பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு


ஆத்தங்கரை ஈரக்காத்து 

மேல பட்டு மோகம் ஆச்சு

கள்ளழகர் வைகை ஆற்றில்

கால வைக்கும் நல்ல நாளில்

எட்டு பட்டி ஊரு சனம்

கட்டுச்சோறு கட்டி வரும்

சொக்கனுக்கு மீனாள் போலே

தக்க துணை வாச்சதாலே

சின்னஞ்சிறு சோடி எல்லாம்

சித்திரையில் இங்கு வரும்

உன்மேல தான் ஆச வச்சேன்

வேறெதுக்கு மீச வைச்சேன்

என் புருஷன் நீயாகத்தான்

போன சென்மம் பூச வச்சேன்

உன்னோடு தான் நானும் கூட

என்னோடு தான் நீ கூட

போடு முந்தானை ஹோ...

ஆத்தங்கரை ஈரக்காத்து 

மேலே பட்டு மோகம் ஆச்சு

ராத்திரியில் பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு

கூட வந்து சேரு 

நான் சொட்டும் கனிச்சாறு

ஆ...போடு நிலாச்சோறு 

என் பொன்னுமணி தேரு

எல்லோருக்கும் எழுதி வச்சான் 

எங்களைத்தான் கட்டி வச்சான்

பொன்ஜாதியோ பூந்தோரணம் 

நானோ ரொம்ப சாதாரணம்

வெண்ணிலவ மேகம் போலே 

என்னை அவ மூடி வைப்பா

மத்தவங்க கண்ணு பட்டா 

தத்தளிப்பா தான் தவிப்பா

ஊருக்கவ ராணி போல 

எனக்கு அவ அம்மன் போல

சொல்ல போனா என்ன போல 

பாக்யவான் யாரும் இல்லை

தாரம் கூட தாயைப் போல 

ஈடு சொல்ல யாரும் இல்லை

எல்லாம் என் யோகம்...

ராத்திரியில் பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு

ஆத்தங்கரை ஈரக்காத்து 

மேலே பட்டு மோகம் ஆச்சு

போடு நிலாச்சோறு 

என் பொன்னுமணி தேரு

கூட வந்து சேரு 

நான் சொட்டும் கனிச்சாறு

ராத்திரியில் பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு

ஆத்தங்கரை ஈரக்காத்து 

மேலே பட்டு மோகம் ஆச்சு

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்