மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:வல்லவனுக்கு வல்லவன் (1965)

இசை:வேதா

குரல்: டி.எம்.எஸ் & பி.சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

✨✨✨✨✨✨✨✨✨

மனம் என்னும் மேடை மேலே

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

குயில் ஒன்று பாடுது

யார் வந்தது… அங்கே யார் வந்தது

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

இசை ஒன்று பாடுது

யார் வந்தது… அங்கே யார் வந்தது

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

குயில் ஒன்று பாடுது

யார் வந்தது… அங்கே யார் வந்தது

தமிழ் காவிரி நீராடி

இரு விழிகளில் காதல் மலர் சூடி

வண்ணப் பூச்சரம் போலாடி

உடலழகில் பொன்னுடன் விளையாடி (தமிழ்)

சிலை ஒன்று நேரில் வந்து.. உயிர் கொண்டு ஆடுது

கலைத் தென்றல் வீசுது

யார் வந்தது… அங்கே யார் வந்தது

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

இசை ஒன்று பாடுது

யார் வந்தது… அங்கே யார் வந்தது

விழி மேலொரு விழி சேர்த்து

பருவக் களை மேனியில் கை சேர்த்து

கனி இதழுடன் இதழ் சேர்த்து

வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து (விழி)

சிலை ஒன்று தேரில்… எனைக் கொண்டு சென்றது

துணைத் தென்றல் ஆனது

யார் வந்தது.. அங்கே யார் வந்தது

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

இசை ஒன்று பாடுது

யார் வந்தது… அங்கே யார் வந்தது

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்