மாலை பொன்னான மாலை இளம்பூவே நீ வந்த வேளை

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: நிலவே மலரே

இசை: M.S.V

பாடியவர்கள்:

K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம்

ஆண்டு:1986

வரிகள்: குருவிக் கரம்பை ஷண்முகம்

✨✨✨✨✨✨✨✨✨

டக் டக் டக் ட ஜூம் டும் டும் ட..

டக் டக் டக் ட ஜூம் டும் டும் ட..

டக் டக் டக் ட ஜூம் டும் டும் ட..

மாலை பொன்னான மாலை

இளம்பூவே நீ வந்த வேளை

தேனே சங்கீதம் தானே

தினம் பாடும் ஆனந்த தேனே

டக் டக் டக் ட ஜூம் டும் டும் ட..

டக் டக் டக் ட ஜூம் டும் டும் ட..

மாலை பொன்னான மாலை

இளம்பூவே நீ வந்த வேளை

தேனே சங்கீதம் தானே

தினம் பாடும் ஆனந்த தேனே

நித்திலத்தில் ஒத்திகைக்கு ஒத்து வந்து சுகம் கொடுப்பாயோ

சித்திரத்தில்

முத்தெடுக்கும் தத்துவத்தின்

கதை படித்தாயோ..

மாலை பொன்னான மாலை

இளம்பூவே நீ வந்த வேளை

தேனே சங்கீதம் தானே

தினம் பாடும் ஆனந்த தேனே

தங்கத்தளிரே அங்கம் உனது

பொங்கித்தழுவும் எந்தன் மனது

 என்னைக்கொடுப்பேன் இன்பம் பெருக

உன்னை அணைப்பேன் உள்ளம் மகிழ

மனமோ மாற்றம் இல்லை

உறவோ ஏங்கும் சொல்லை

கனவோ நீங்கும் எல்லை

நினைவோ பூக்கும் முல்லை

மாலை பொன்னான மாலை

இளம்பூவே நீ வந்த வேளை

தேனே சங்கீதம் தானே

தினம் பாடும் ஆனந்த தேனே

உன்னை நினைத்தேன் உள்ளம் உருக

கண்ணை அசைத்தேன் கன்னம் பருக

இந்தக் கணமே இன்பம் பெருக

என்னை மறப்பேன் நெஞ்சம் கருக..

இரவோ தூக்கம் இல்லை

இமையோ தாங்கும் தொல்லை..

இவளோ ஏங்கும் கிள்ளை

இனியோ பேச்சும் இல்லை..

இருவரும்: மாலை பொன்னான மாலை

இளம்பூவே நீ வந்த வேளை

தேனே சங்கீதம் தானே

தினம் பாடும் ஆனந்த தேனே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்