கனியக் கனிய மழலை பேசும் கண்மணி - உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:மன்னாதி மன்னன்

இசை:M.S.விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண்டு:1960

வரிகள்:கண்ணதாசன்

பாடியவர்கள்:T.M.S & P.சுசீலா

✨✨✨✨✨✨✨✨✨

கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -

உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -

எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -

இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பந்தயமாகாதோ

இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -

புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே

கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -

உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -

எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே

கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே

அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ -

அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே

கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -

உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -

எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ -

உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ

மாந்தளிர் போலும் எழில்மேனி

மின்னுவதெப்படியோ..

உம்..............உம்...............

நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

நீலவானும் நிலவும் போல கூடுவோம் -

நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம்

ஆ....ஆ....ஆ...ஆ...

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்