வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

 

படம்: புதுக்கவிதை

பாடல்: வைரமுத்து

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ

ஆண் : வெள்ளை புறா ஒன்று

ஏங்குது கையில் வராமலே

பெண் : வெள்ளை புறா ஒன்று

ஏங்குது கையில் வராமலே

ஆண் : நமது கதை புது கவிதை

இலக்கணங்கள் இதற்கு இல்லை

பெண் : நான் உந்தன் பூ மாலை

ஓஓஓ…………

ஆண் : வெள்ளை புறா ஒன்று

ஏங்குது கையில் வராமலே

பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது

கரைகள் என்ன வேலியோ

ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி

பாதை மாற கூடுமோ

பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்

முகங்களின் நிறம் பார்க்குமோ

ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்

பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்

ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட

பெண் : வெள்ளை புறா ஒன்று

ஏங்குது கையில் வராமலே

ஆஆஆஆ……………….

ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்

காவல் தன்னை மீறுமே

பெண் : காலம் மாறும் என்ற போதும்

காதல் நதி ஊறுமே

ஆண் : வரையரைகளை மாற்றும் போது

தலைமுறைகளும் மாறுமே

பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே

ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே

பெண் : கார்கால சிலிர்ப்புகள்

கண்ணோரம் உண்டாக

ஆண் : வெள்ளை புறா ஒன்று

ஏங்குது கையில் வராமலே

பெண் : நமது கதை புது கவிதை

ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை

நான் உந்தன் பூ மாலை

ஓஓஓஓ………………….

ஆண் மற்றும் பெண் : லாலா லலலலா

லாலா லாலா லலலலா

லாலா லலலலா

லாலா லாலா லலலலா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்