அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அது ஒரு கனாக்காலம்

ஆண்டு:2005

பாடியவர்கள்:விஜய் யேசுதாஸ்,ஸ்ரேயா கோஷல்

இசை:இளையராஜா

வரிகள்: நா.முத்துக்குமார்

✨✨✨✨✨✨✨✨✨

அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி 

அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே 

தினமுமோர் கோலம் இளமை திருவிழா காலம் 

வழி திறந்ததே வா வா ப்ரியசகி (அந்த)

அலை அலையா தினம் தினம் வரும் கனவுகளில் 

ரதி ஒருத்தி அருகினில் வர கண் விழித்தேன் நானே 

தொடரட்டுமே நிஜமென அந்த கனவுகளே 

வளரட்டுமே சிறு பிறையொரு காதல் நிலா ஆக 

வருகிறாள் வருகிறாள் 

வானில் தேவதை தேவதை 

ஓஹோ வருகிறாள் வருகிறாள் 

வானில் தேவதை தேவதை நம்மை வாழ்த்தவே (அந்த)

எங்கிருந்தாய் இதுவரை எனை தவிக்க விட்டு 

எதற்கு வந்தாய் தவித்திடும் துயர் துடைக்க வந்தாயோ 

நடப்பதெல்லாம் எழுதியபடி நடக்கிறதோ 

இருவருக்கும் பொருந்திடும்படி எழுதியதாரோ 

கேட்குதே கேட்குதே 

கோயில் பொன்மணி ஓசைகள் 

ஓஹோ கேட்குதே கேட்குதே 

கோயில் பொன்மணி ஓசைகள் நம்மை வாழ்த்தவே (அந்த)

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்