நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே

 ✨✨✨✨✨✨✨✨

படம்:வானமே எல்லை

ஆண்டு:1991

இசை:M.M.கீரவாணி (மரகதமணி)

வரிகள்:வைரமுத்து

பாடியவர்கள்: S.P.B & K.S.சித்ரா

✨✨✨✨✨✨✨✨✨

நீஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே

கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத புது இந்தியன்

நீ என்றால் பொய்யில்லையே

தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்

உன் போலே ஊரில்லையே

ம்..ம்ம்ம்ம்..

இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்

ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்

தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே

பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே

உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்

எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே

கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

ஆரோ... ஆரோ... ஆரோ... ஆராராரோ...

ஆரோ... ஆரோ... ஆரோ... ஆரீராரோ...

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே

வான்வெளியில் தாலாட்டுதே

கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே

சூரியனை தாலாட்டுதே

ஆ... ஆஆஆஆ...

முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்

முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில்

நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா

முள்ளென்பது ரோஜாவி்ல் உறவா பகையா

காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது

கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே

கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்