பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: எங்க ஊர் ராசாத்தி

ஆண்டு:1980

இசை:கங்கை அமரன்

பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன், S.P.ஷைலஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண்    :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் (இசை)

ஆண்   :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி...

அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி

அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி

 ✨               

பெண்   :  மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது

எனக்கோ ஆசை இருக்குது ஆனா நிலைமை தடுக்குது

உன்னை மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா

 ராசாவே...காற்றில் ஆடும் தீபம் போல

 துடிக்கும் மனச அறிவாயோ

ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை (இசை)

பெண்      :  ஆரிராராரோ... ஆரி ராரோ...

 ஆரிராராரோ... ஆரிராராரோ... ஆராரோ...ஆராரோ

ஆண்      :  எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது

 அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது

 ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும்

காலம் இனிமே வாராதோ

பெண்    :   இன்னோரு ஜென்மம் இருந்தா

அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா

 கலந்து அன்போட இருப்போம்

 அது கண்டாலம் போச்சுதுன்னா

என் ராசாவே...

 நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக

 வானத்தில் பொறந்திருப்பேன்

 என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்

 நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்