நான் பிழைக்கின்றேன் ஏனோ

 ✨✨✨✨✨✨✨✨✨

பாடல் : சூரியவேலன்

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!

பெண் : நான் உன்னோடு இல்ல

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!

ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…

உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…

உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!

நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

பெண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…

உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…

உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!

நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

ஆண் : நான் போகின்ற வழியெல்லாம்

நீ அல்லவா!

உயிர் சுமக்கின்ற காதலும்

உனது அல்லவா!

பெண் : உன் பிழை தாண்டி

நான் உன்னை நேசிக்கவா!

இல்லை நீ இன்றி

நான் வாழ வழி தேடவா!

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!

ஆண் : ஓ! நம் காதல் பாவம் என்றால்

மீண்டும் மீண்டும் செய்வேனோ!

நீ இன்றி மண்ணில் வாழ

இன்றே சாவேனோ!

பெண் : என் இதய செல்லில் கூட

அன்பே உந்தன் பெயர் தானோ

ஆயிரம் ஜென்மம் சேரும்

காதல் நீதானோ

ஆண் : உன் மூச்சுக் காற்றினை

நான் தொழுதிடவா

பெண் : என் காதல் முழுமையும்

வாடகை விடவா

ஆண் : காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே

பெண் : உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனோ

ஆண் : நான் உனதில்லை என்றால் இறக்கவா!

உயிரே! உனதால் நான் பிறக்கவா!

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!

நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!

நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் விழிகளில் தானோ!

தானோ… தானோ…

தானோ… தானோ…

தானோ… தானோ…

பெண் : ஹா ..ஆ

✨✨✨✨✨✨✨✨

ஆண் : சொல்லாத காதல் எல்லாம்

கல்லறையிலா சேரும்

நீ விட்டு போன தூரம்

எல்லாம் தீயா யாமோ

பெண் : உன்னாலே உள்ளுக்குள்ளே

கண்ணீரோடு போராட்டம்

ஆறாத உன் நினப்பு

என்னை கொல்லட்டும்

ஆண் : நீ நெஞ்சின் ஓரத்தில்

வலிக்கின்ற பாதியா!

பெண் : உன் முதல் கவிதையில்

நான் இனி இல்லையா!

ஆண் : ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ?

பெண் : நீ அறிவாய் என தவித்து நின்றேனோ!

பெண் : நான் அதில் இல்லையென்றால் இறக்கவா!

உயிரே! உயிரே! உனதாய் நான் பிறக்கவா!

பிறக்கவா…பிறக்கவா…

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் விழிகளில் தானோ!

ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்

உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்

உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!

நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

பெண் : நான் போகின்ற வழியெல்லாம்

நீ அல்லவா!

உயிர் சுமக்கின்ற காதலும்

உனது அல்லவா!

ஆண் : உன் சிறைமீட்டு

நான் தினம் உன்னை காக்கவா

இல்லை நீ இன்றி

நான் வாழ வழி தேடவா

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் விழிகளில் தானோ!

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஹா..ஆ..ஹா..ஆ..ஹா..ஆஅ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்