புன்னை வனத்துக் குயிலே நீ

 ✨✨✨✨✨✨✨✨

படம்:முத்துக்காளை

ஆண்டு:1995

இசை:இளையராஜா

வரிகள்:வாலி

பாடியவர்கள்:S.P.B & S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨

புன்னை வனத்து குயிலே நீ

என்னை நினைத்து இசை பாடு

முல்லை வனத்துக் குளிரே நீ

என்னை அணைத்து உறவாடு

வேங்குழலின் ஓசை எழ

பாய் விரிக்கும் ஆசை எழ

மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க

பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

புன்னை வனத்து குயிலே நீ

என்னை நினைத்து இசை பாடு

மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று

அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று

அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு

என்னை அள்ளாதே ஆவாரம் பூவும் நானும் ஒன்று

கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா

கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா

என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது

என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது

மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க

ஒ..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

புன்னை வனத்து குயிலே நீ

என்னை நினைத்து இசை பாடு 

முல்லை வனத்து குளிரே நீ

என்னை அணைத்து உறவாடு

என் மீது தூரல்கள் போட மேகம் வர

அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர

முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே

ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே

நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே

நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே

மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்

இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்

மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க

ஒபாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

முல்லை வனத்து குளிரே

நீ என்னை அணைத்து உறவாடு

வேங்குழலின் ஓசை எழ

பாய் விரிக்கும் ஆசை எழ

மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க

பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

புன்னை வனத்துக் குயிலே நீ

என்னை நினைத்து இசை பாடு

முல்லை வனத்துக் குளிரே நீ

என்னை அணைத்து உறவாடு

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்