கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: வில்லுப்பாட்டுக்காரன்

இசை:இளையராஜா

பாடியவர்:S.P.B

வரிகள்:வாலி

ஆண்டு:1992

✨✨✨✨✨✨✨✨✨

கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ (2)

அவ மேலழகும் தண்டக் காலழகும்

தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு

வரும்

கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ (2)

பாதம் தொடும்

பூங்கொலுசு தானதந்தோம்

பாட 

வேதங்களும் நாதங்களும்

வேண்டி வந்தது கூட பாதங்கள

பாத்ததுமே பார்வ வலிய மேலே

வேதனைகள மாத்திடும் அவ

விரிஞ்ச செண்பகச் சோல

பூத்ததய்யா பூவு

அது கையழகு தூக்குதய்யா

வாசம் அது மெய்யழகு நான்

வந்தேன் வாழ்த்திப் பாட

நல்லத சொன்னேன் ராகத்தோட

கண்டேன் சீதைப்போல கண்டதும்

நின்னேன் சிலையப் போல

இந்திரலோகம் சந்திரலோகம்

சுந்தரலோகம் போற்ற

கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ (2)

அவ மேலழகும் தண்டக் காலழகும்

தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு

வரும்

கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ

கோடை மழை கொண்டு

வரும் கூந்தல் என்கிற மேகம்

ஜாடையில ஏத்தி விடும் தாகம்

என்கிற மோகம் கோடியில

ஒருத்தியம்மா கோலமயில் ராணி

ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும்

மேனி

தேர் நடந்து தெருவில்

வரும் ஊர்வலமா 

ஊர் உலகில்

அவளப் போல பேர் வருமா

நல்ல பளிங்கு போல சிரிப்பு

மனசப் பறிக்கும் பவள விரிப்பு

விளங்கிடாத இனிப்பு விவரம்

புரிஞ்சிடாத துடிப்பு சந்திர ஜோதி

வந்தது போல சுந்தர தேவி

ஜொலிப்பு

கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ (2)

அவ மேலழகும் தண்டக் காலழகும்

தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு

வரும்

கலைவாணியோ

ராணியோ அவள்தான்

யாரோ சிலை மேனியோ

தேவியோ எதுதான் பேரோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்