ஒரு பூஞ்சோலை ஆளானதே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:வாத்தியார் வீட்டு பிள்ளை

ஆண்டு :1989

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

குழு:ஆ.............ஆ....

ஆண் : ஹே…..ஒரு பூஞ்சோலை

ஆளானதே

ஹே…….ஒரு பொன்மாலை

தோள் சேருதே

பெண் : மலர்களின் முன்னும் பின்னும்

பனித் துளி மின்னும் மின்னும்

ஆண் : பருவங்கள் துள்ளும் துள்ளும்

பழகிட சொல்லும் சொல்லும் முத்தம்

பெண் : தரும் சத்தம் அதில்

ஆண் : நித்தம் நித்தம்

நெஞ்சம் மயங்குதே

பெண் : ஹே…..ஒரு பூஞ்சோலை

ஆளானதே

ஆண் : ஹே…….ஒரு பொன்மாலை

தோள் சேருதே

குழு : ஹா….ஆஅ….ஆஅ…ஆ

ஹா….ஆஅ….ஆஅ…ஆ

ஹா….ஆஅ….ஆஅ…ஆ

ஆண் : சிங்கார வெண்ணிலா

மண் மீதிலே

சங்கீதம் பாடுதே

உன் கண்ணிலே

பெண் : செந்தாடும் பொன் மயில்

உன் தோளிலே

நின்றாட ஏங்குதே

இந்நாளிலே

ஆண் : காதல் தேனாறு

பாய்ந்தோடும் நேரம்

பெண் : ஆசைத் தேரேறி

ஊர்கோலம் போகும்

ஆண் : அழகிய சித்திரமே

மதன் கலை புத்தகமே

இளமை எழுதும் இனிய கதையை

இரு உடல் அனுதினம்

எழுதட்டுமே

பெண் : ஹே…..ஒரு பூஞ்சோலை

ஆளானதே

ஆண் : ஹே…….ஒரு பொன்மாலை

தோள் சேருதே

குழு : ……………..நாந நாநா

பெண் : ஆகாய மேகமாய்

நான் மாறியே

உன் மீது வெண்பனி

நான் தூவவா

ஆண் : விண்மீனை பூக்களாய்

நான் கிள்ளியே

உன் தோளில் மாலையாய்

நான் போடவா

பெண் : கண்ணில் காணாத

இன்பங்கள் யாவும்

மண்ணில் காண்பேனே

உன்னாலே நானும்

பெண் : கரும்பினில் வில்லெடுத்து

அரும்பினில் அம்பெடுத்து

உருவம் இழந்த

ஒருவன் எனது

உருகிடும் இதயத்தை

துளைப்பதும் ஏன்

ஆண் : ஹே…..ஒரு பூஞ்சோலை

ஆளானதே

ஹே…….ஒரு பொன்மாலை

தோள் சேருதே

பெண் : மலர்களின் முன்னும் பின்னும்

பனித் துளி மின்னும் மின்னும்

ஆண் : பருவங்கள் துள்ளும் துள்ளும்

பழகிட சொல்லும் சொல்லும் முத்தம்

பெண் : தரும் சத்தம் அதில்

ஆண் : நித்தம் நித்தம்

நெஞ்சம் மயங்குதே

பெண் : ஹே…..ஒரு பூஞ்சோலை

ஆளானதே

ஆண் : ஹே…….ஒரு பொன்மாலை

தோள் சேருதே

குழு : ஹா….ஆஅ….ஆஅ…ஆ

ஹா….ஆஅ….ஆஅ…ஆ

ஹா….ஆஅ….ஆஅ…ஆ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்