எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: அவன் தான் மனிதன் 

வரிகள் : கண்ணதாசன் 

பாடகி : வாணி ஜெயராம்

இசை : எம். எஸ். விஸ்வநாதன்

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : ஹா……ஆஅ…..ஹா….ஆஅ…..ஆஅ….

பெண் : ஹா…..ஆ…..ஹா…..ஆ……ஹா….

பெண் : எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

பெண் : எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண் : எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

பெண் : தாழங் குடைகள்

தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

தாழங் குடைகள்

தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

பெண் : மாலை மணிகள் மந்திரக் கனிகள்

மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது

அது எந்த ஆலயத்து மணியோ

பெண் : எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண் : கதிரொளி தீபம்

கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கதிரொளி தீபம்

கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

பெண் : கண்டனள் ஒருத்தி

வந்தனன் கண்ணன்

கண்கள்….தூங்காத இரவு

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது

அது எந்த மன்னன் தந்த அனலோ

பெண் : எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண் : எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது இந்த தேவதையின் குரலோ…

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்