அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:சந்திரலேகா

ஆண்டு:1995

பாடகர் : அருண் மொழி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

மலரும் மனமே

மனம் ஏந்திடும் கனியே

கனிப் ​பாவையே ​

ஆண் : மானாடும் மீனே…..ஏ….

நீதானே வேண்டும்.

பூ நாடும் உயிரே

நீதானே வேண்டும்

பெண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

அரும்பும் தளிரே

ஆண் : இனிமையான பொன் மாலை வேளை

வலை ஒசை தூது வந்ததே

இளைய ராணி வரும் நேரம் என்று

இனிப்பான சேதி சொன்னதே

பெண் : பூ மாலை நீ சூடவே

பாவையாய் மண்ணில் தோன்றினேன்

ஆண் : என் ஜீவன் நீயாகவே

எனதெல்லை நானும் தாண்டினேன்

பெண் : வானும் பூமி

வாழும் காலம்

நானும் நீயும் வாழலாம்.

ஆண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

மலரும் மனமே

மனம் ஏந்திடும் கனியே

கனிப் ​பாவையே ​

ஆண் : மானாடும் மீனே…..ஏ….

நீதானே வேண்டும்.

பூ நாடும் உயிரே

நீதானே வேண்டும்.

பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று

திருக்கோயில் தீபம் ஏற்றினேன்

விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி

குழல் மீது பூவை சூட்டினேன்

ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்

தேடி வாடினேன்

பெண் : நான் சூடும் நூலாடையாய்

உனைத் தானே நாளும் சூடினேன்

ஆண் : ராஜ ராஜன் கூடும்போது

ராஜ யோகம் வாய்த்தது

பெண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

மலரும் மனமே

மனம் ஏந்திடும் கனியே

கனிப் ​பாவையே ​

பெண் : மானாடும் மீனே…..ஏ….

நீதானே வேண்டும்.

பூ நாடும் உயிரே

நீதானே வேண்டும்.

ஆண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

அரும்பும் தளிரே……ஏ….

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்