உன்னை பிரிந்து போகையிலே உள்ளம் எரிந்து போகுதடி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:வாழ்த்துக்கள் 

ஆண்டு:2007

பாடகர்கள் : ஹரிச்சரண் மற்றும் திஷாந்தன்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

வரிகள்:

நா.முத்துக்குமார்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே…….உயிரே

ஆண் : கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..

காதல் சொன்னதும் நீதான்

காயம் தந்ததும் நீதான் கண்மணி…..

நினைவை தந்ததும் நீதான்

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி…..

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே…….உயிரே

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..கண்மணி

ஹ்ம்ம் ம்ம்ம்ம்

உன்னுடைய கால் கொலுசு

எங்க வீட்டில் கேட்டிடுமா

உன்னுடைய புன்சிரிப்பு

என் உதட்டில் பூத்திடுமா

உன்னுடைய கைவிரலை

என் விரல்கள் பிடித்திடுமா

உன்னுடைய இதயத்திலே

என் துடிப்பு ஒலித்திடுமா

உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்

ஹோ ஓ ஓ…..

உன்னுடைய பூ முகத்தை

பார்த்து கொண்டே நான் இருப்பேன்

உன்னுடைய ஞாபகத்தை

விட்டு விட்டால் நான் இறப்பேன்

உன்னுடைய நினைவுகளை

உள்ளுக்குள்ளே தேக்கி வைப்பேன்

என்னிடத்தில் எதுவும் இல்லை

உயிர் மட்டும் பாக்கி வைப்பேன்

உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்…

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..

காதல் சொன்னதும் நீதான்

காயம் தந்ததும் நீதான் கண்மணி…..

நினைவை தந்ததும் நீதான்

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி…..

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே…….உயிரே

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்