தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் :  பயணங்கள் முடிவதில்லை 

வரிகள்: வைரமுத்து   

பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் 

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள்

நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

ஆண் : கோலம் போடும் நாணங்கள்

காணாத ஜாலம்

இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்

கண்ணில் துள்ளும் தாளங்கள்

ஆனந்த மேளம்

இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்

ஆண் : விழிகளிலே காதல் விழா

நடத்துகிறாள் சாகுந்தலா

அன்னமும் இவளிடம் நடைபழகும்

இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

ஆண் : பூமியெங்கும் பூந்தோட்டம்

நாம் காண வேண்டும்

புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்

ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்

அந்த மழையில் மலர்களும் குளிக்கும்

ஆண் : அருவிகளோ ராகந் தரும்

அதில் நனைந்தால் தாகம் வரும்

தேவதை விழியிலே அமுத அலை

கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள்

நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்