எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : இசை பாடும் தென்றல் 

பாடலாசிரியர் :  வாலி  

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : எந்தன் கைக்குட்டையை

யார் எடுத்தது

அன்புக் காதலின் சின்னமாய்

எந்தன் காதலி தந்தது

ஆண் : எந்தன் கைக்குட்டையை

யார் எடுத்தது

எந்தன் கைக்குட்டையை

யார் எடுத்தது

அன்புக் காதலின் சின்னமாய்

எந்தன் காதலி தந்தது

அன்புக் காதலின் சின்னமாய்

எந்தன் காதலி தந்தது

ஆண் : எந்தன் கைக்குட்டையை

யார் எடுத்தது

நீயா நீயா நீயா நீயா

பெண் : ஆ…ஆஆ…..ஆ…..ஆ……ஆ…

சின்னச் சின்ன நூல்களில்

பூக்கள் வரைந்தேன் ஆஹா

என்னை வைத்து நான் அதில்

பின்னி இருந்தேன்

ஆண் : கைக்குட்டையில் சின்னம் ஒன்று

கண்டு பிடித்தேன்

பின்னி வைத்த பூவுக்கு

முத்தம் கொடுத்தேன்

பெண் : காதல் இதயம்

தந்து முடித்தேன்

கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்

ஆண் : பின்னி முடித்த

நூல்களுக்குள் நான்

சிக்கித் தவித்தேன்

சிக்கித் தவித்தேன்

சிக்கல் எடுத்தேன்

ஆண் : எந்தன் கைக்குட்டையை

யார் எடுத்தது

அன்புக் காதலின் சின்னமாய்

எந்தன் காதலி தந்தது

அன்புக் காதலின் சின்னமாய்

எந்தன் காதலி தந்தது

ஆண் : எந்தன் கைக்குட்டையை

யார் எடுத்தது

நீயா நீயா நீயா நீயா

ஆண் : கைக்குட்டையில் வேர்வையை

துடைத்ததில்லை

அதற்கு வலித்திடும் என்று நான்

மடித்ததில்லை

பெண் : உந்தன் கையில் தந்தது

துணியும் இல்லை

என் இதயத்தைத்தான் தந்தேன்

வழியும் இல்லை

ஆண் : உன்னை நினைத்தால்

உறக்கம் இல்லை

இன்பக் கிளியே இரக்கம் இல்லை

பெண் : வாய் திறந்து

என் பெண்மை சொல்வது

வழக்கம் இல்லை

பழக்கம் இல்லை விளக்கம் இல்லை

பெண் : அந்தக் கைக்குட்டையை

யார் எடுத்தது

அன்புக் காதலின் சின்னமாய்

இந்தக் காதலி தந்தது

அன்புக் காதலின் சின்னமாய்

இந்தக் காதலி தந்தது

பெண் : அந்தக் கைக்குட்டையை

யார் எடுத்தது

நான்தான் நான்தான்

நான்தான் நான்தான்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்