நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல

 ✨✨✨✨✨✨✨✨

படம்:அன்னை ஒரு ஆலயம்

இசை:இளையராஜா

பாடியவர்கள்: S.P.B &P.சுசீலா

✨✨✨✨✨✨✨✨

நதியோரம்.........

நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு

நாட்டியம் ஆடுது மெல்ல - நான்

அந்த ஆனந்தம் என் சொல்ல


நதியோரம்.........

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று

நூலிடை என்னிடம் சொல்ல - நான்

அந்த ஆனந்தம் என் சொல்ல


( நதி )


வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு

ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன

முகில்தானோ.. துகில்தானோ..

சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு

தேன் வேண்டுமா நான் வேண்டுமா

நீ எனைக் கைகளில் அள்ள.. - நான்

அந்த ஆனந்தம் என் சொல்ல


( நதி )


தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்

துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன

பனி தூங்கும் பசும்புல்லே

மின்னுது உன்னாட்டம் நல்ல

முத்திரைப் பொன்னாட்டம்

கார்காலத்தில் ஊர்கோலத்தில்

காதலன் காதலி செல்ல - நான்

அந்த ஆனந்தம் என் சொல்ல


( நதி )

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்