உன்னை நானே……அழைத்தேனே உயிர் நீதான்……இளமானே ✨

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:சின்னக்குயில் பாடுது

பாடியவர்:K.S.சித்ரா

இசை:இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

உன்னை நானே……அழைத்தேனே

அழைத்தேனே…..

அழைத்தேனே…..

உயிர் நீதான்……

இளமானே இளமானே இளமானே

 உன்னை நானே…… அழைத்தேனே

உயிர் நீதான்…… இளமானே

உன்னை நானே…… அழைத்தேனே

உயிர் நீதான்…… இளமானே

பாடல் ஆயிரம் பாடிட வேண்டும்

வாழும் காலங்கள் தோறும்

வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து

நாளும் வாழ்த்துக்கள் கூறும்…..

உன்னை நானே……அழைத்தேனே

உயிர் நீதான்……இளமானே

சோறூட்டி நாள் எல்லாம்

பசியாறப் பார்த்ததும்

சீராட்டி நான் உனை

தோள் மீது சேர்த்ததும்

ஏதோ கனவானது 

ஏட்டில் கதை ஆனது

ஆனால் அதன் ஞாபகம்

நெஞ்சில் நிழலாடுது

 பெற்றெடுத்த அன்னை இவள்

விண்ணில் இருக்க

பிள்ளை முகம் எப்பொழுதும்

கண்ணில் இருக்க

மண் மூடிப் போனாலும்

வெவ்வேறு ஆனாலும்

என் ஜீவன் எந்நாளும்

உன்னோடு தான்……

உன்னை நானே……அழைத்தேனே

உயிர் நீதான்……இளமானே

வேறாரும் தாய்

என உருமாறக் கூடுமா

உப்புக் கல் வைரமாய்

ஒரு போதும் மாறுமா

தாரம் இரண்டாகலாம்

தந்தை இணை சேரலாம்

அன்னை இரண்டாகுமோ

ஊரில் இரு வானமோ

வந்தவனின் சொந்தம்

இங்கு கட்டில் வரைதான்

என்னுடைய பந்தம்

இங்கு தொட்டில் வரைதான்

காணாமல் நின்றாலும்

காற்றாகிச் சென்றாலும்

கண்ணா என் காலங்கள்

உன்னோடுதான்…..

உன்னை நானே……அழைத்தேனே

உயிர் நீதான்……இளமானே

பாடல் ஆயிரம் பாடிட வேண்டும்

வாழும் காலங்கள் தோறும்

வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து

நாளும் வாழ்த்துக்கள் கூறும்…..

உன்னை நானே……அழைத்தேனே

உயிர் நீதான்……இளமானே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்