ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: முதல் மரியாதை

இசை:இளையராஜா

பாடியவர்:S.ஜானகி

ஆண்டு:1985

வரிகள்:வைரமுத்து

✨✨✨✨✨✨✨✨✨

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க

வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க

வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது

உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது

அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக

களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு

அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

காதில நரைச்ச முடி கன்னத்தில் குத்துது குத்துது

சுழியில குடகு போல என் மனசு சுத்துது சுத்துது

பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு

விவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு

ஒதுக்கி வச்சிருக்கேன் மூச்சு

எதுக்கு இந்த கதி ஆச்சு?

அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ள பேச்சு.

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க

வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க 

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்