உனை கண்டேனே எனை தந்தேனே சொர்சுவையே பொன் சிலையே

 ✨✨✨✨✨✨✨✨

படம்: கண்டேன்

பாடகர்கள்: Dr . பரன்,  கிரிஷ், பிரஷாந்தினி

வரிகள்:தாமரை

ஆண்டு:2010

✨✨✨✨✨✨✨✨

உனை  கண்டேனே எனை தந்தேனே

சொர்சுவையே பொன் சிலையே

வா பேபி  பேபி

உள்ளுணர்வே மைவிழியே

பொய்சொன்னாலும் என் காதல் உண்மை

தேவி

என் செவிகளில் கவிதையை போல

என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக

என் நந்தவன பூக்களை போல

தினம் மலர்கின்றாய் விரல் தீண்டவேண்டும்

வரம் வேண்டும் தருவாயா

எங்கே என் இதயம் எங்கே

எங்கே  நான் தேடி பார்த்தேன்

அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தானா

இங்கே உன் இதயம் வந்து

நின்றே என் கதவை தட்டி

கொண்டே நிற்பதை கண்டேன் உண்மைதானா

தொலைதூர வெளிச்சங்கள் நீயே

மலையோர வெளிச்சமும் நீயே

அன்பில் சந்தேகம் கொள்ளாதே

கொண்டால் என் ஜீவன் நில்லாதே

இமைபொழுது உன் நெஞ்சில் இருந்து

நனி கதவென வேண்டும் தருவாயா, தருவாயா

என் அன்பே அன்பே எனை வினை பிடிக்கும்

திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது

உணர்வாயா  உணர்வாயா

என் அன்பே அன்பே

காரிருளில் சூரியன் மேரலையில் தாமரை

பாதத்தில் மேகம் பாலை மண்ணில் வான்மழை

வாயசைத்து பார்க்கிறேன் வார்த்தைகளில் உன் மொழி

உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன்துளி

கடிகாரம் காட்டுமா மனம் செல்லும் வேகத்தை

புயலாகி உன்னை நான் அடைவேன்

நீ செல்லும் வழி எல்லாம் மரமாவேன்

ஒரு சொட்டு வெயில் கூட விட மாட்டேன்

எங்கே என் இதயம் எங்கே

எங்கே  நான் தேடி பார்த்தேன்

அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தானா உனை  கண்டேனே

இங்கே உன் இதயம் வந்து

நின்றே என் கதவை தட்டி

கொண்டே நிற்பதை கண்டேன் உண்மைதானா

உனை  கண்டேனே எனை தந்தேனே

சொர்சுவையே பொன் சிலையே

வா பேபி  பேபி

உள்ளுணர்வே மைவிழியே

பொய்சொன்னாலும் என் காதல் உண்மை

தேவி

காற்றில் வரம் வாங்கினேன்

மூங்கில் வலி நீங்கினேன்

சங்கீதமாக உன்னைத்தானே பாடினேன்

காத்திருந்த நாட்களில்

காதல் ஒரு ஆறுதல்

காணாமல் சென்று பின்பு தோன்றும் வானவில்

பிழை சேர்ந்த போதிலும் குறை நின்ற போதிலும்

உனக்காகதானே அதை செய்தேன்

இனி என்னை பிரியாதே ஒரு நாளும்

பிரிந்தால் என் உயிரே உன் சுமையாகும்

எங்கே என் இதயம் எங்கே

எங்கே  நான் தேடி பார்த்தேன்

அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தானா உனை  கண்டேனே

இங்கே உன் இதயம் வந்து

நின்றே என் கதவை தட்டி

கொண்டே நிற்பதை கண்டேன் உண்மைதானா

தொலைதூர வெளிச்சங்கள் நீயே

மலையோர வெளிச்சமும் நீயே

அன்பில் சந்தேகம் கொள்ளாதே

கொண்டால் என் ஜீவன் நில்லாதே

உனை  கண்டேனே எனை தந்தேனே

சொர்சுவையே பொன் சிலையே

வா பேபி  பேபி

உள்ளுணர்வே மைவிழியே

பொய்சொன்னாலும் என் காதல் உண்மை

தேவி

என் செவிகளில் கவிதையை போல

என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக

என் நந்தவன பூக்களை போல

தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்

வரம் வேண்டும் தருவாயா


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்