கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: என் அண்ணன்

இசை: கே வி மகாதேவன் 

பாடியவர் :டி.எம் சௌந்தர்ராஜன் 

வரிகள்: கண்ணதாசன் ஆண்டு: 1970 

✨✨✨✨✨✨✨✨✨

கடவுள் ஏன் கல்லானான் 

மனம் கல்லாய் போன மனிதர்களாலே 

கடவுள் ஏன் கல்லானான் 

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை

கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்

இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்

இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன் கல்லானான் 

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -

அது நீதி தேவனின் அரசாட்சி

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -

மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி

அரங்கத்தில் வராது அவன் சாட்சி 

கடவுள் ஏன் கல்லானான் 

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

சதி செயல் செய்தவன் புத்திசாலி -

அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி

உண்மையை சொல்பவன் சதிகாரன்

உண்மையை சொல்பவன் சதிகாரன் -

இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -

இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்

கடவுள் ஏன் கல்லானான் 

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்