கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : நினைக்க தெரிந்த மனமே 

பாடல் : கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்

பாடலாசிரியர் :  காமகோடி 

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : ஸ்மைல் ப்ளீஸ்…

ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்

நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்

நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே

மாலைத் தென்றலே மாலை கொண்டு வா

வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்

நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

நினைக்கத் தெரிந்த மனம்

மறக்கத் தெரிவதில்லை கவிஞனின் கவிதை

உயிரின் உறவு இது உணரும் தருணம் இது

நடத்தட்டும் வயதை

நினைக்கத் தெரிந்த மனம்

மறக்கத் தெரிவதில்லை கவிஞனின் கவிதை

உயிரின் உறவு இது உணரும் தருணம் இது

நடத்தட்டும் வயதை

மாணிக்கத் தீவே மாலைப் பூவே

காணக் கண் கோடி வேண்டும் தாயே

ஆணிப் பொன் தேகம் ஆனந்த மேகம்

மாலைத் தென்றலே மாலை கொண்டு வா

வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்

நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

விசில் : ………………………..

புருவக் கொடி பிடித்து

பருவ படையெடுத்து

ஜெயித்திடும் இனமே

அபயக் குரல் கொடுத்து

அழகு கரம் பிடித்து

அடைக்கலம் மனமே} (2)

தோற்றாலும் தேனே

நான்தான் ராஜா

ஏற்றுக் கொண்டால்தான் வாழ்வேன் ரோஜா

நேருக்கு நேராய் நெஞ்சத்தைப் பாராய்

மாலைத் தென்றலே மாலை கொண்டு வா

வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்

நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே

மாலைத் தென்றலே மாலை கொண்டு வா

வேளை வந்ததே வாழ்த்துப் பாடவா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்