நேரமிது நேரமிது

 ✨✨✨✨✨✨✨✨

படம்:ரிஷிமூலம்

பாடகர்கள் : சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : 

இளையராஜா

ஆண்டு:1980

வரிகள்:கண்ணதாசன்

ராகம்:நடபைரவி

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

பெண் : நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

ஆண் : {மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா} (2)

பெண் : கூண்டுக் கிளிக்கொரு

ஆசை பிறந்த பின்

கோலம் போடும் நேரங்கள்

ஆண் : நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

பெண் : {திங்கள் ஒளி திங்களை போல்

உங்கள் பிள்ளை உங்களை போல்

உங்களை தான் நாடுகிறான்

என்னிடம் ஆசையில்லை} (2)

ஆண் : நீ பெற்ற பிள்ளையின்

வேகமும் கோபமும்

உன்னை போல தோன்றுதே

பெண் : நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

ஆண் : இன்னும் ஒன்று வேண்டும் என்று

தெய்வத்திடம் கேட்டிருந்தேன்

இந்த ஒன்றே போதும் என்றாள்

தேவி என் காதினிலே

ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன

பிள்ளை கூட இன்பமே

ஆண் : நேரமிது நேரமிது

பெண் : நெஞ்சில் ஒரு பாட்டெழுத

ஆண் : இன்பம் என்னும் சொல் எழுத

பெண் : நீ எழுத

ஆண் : நான் எழுத

பெண் : பிறந்தது பேரெழுத

இருவர் : பிறந்தது பேரெழுத

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்