சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

 ✨✨✨✨✨✨✨✨✨

தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒரு சிறந்த தாலாட்டு பாடல் 

✨✨✨✨✨✨✨✨✨

" மகனே நீ வந்தாய்

மழலை சொல் தந்தாய்

வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா"

"மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா"

 கண்ணதாசன் வரிகள்

✨✨✨✨✨✨✨✨✨

படம்:மகாதேவி

ஆண்டு:1957

இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடியவர்கள்:M.S. ராஜேஸ்வரி & R.பாலசரஸ்வதி தேவி

வரிகள்:கண்ணதாசன்

✨✨✨✨✨✨✨✨✨

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

ஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்

எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ

கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்

எண்ணங்கள் கீதம் பாடுமே

பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்

பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா

பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்

பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா

ஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

ஆஆஆஆஆஆஆ

செல்வமே என் ஜீவனே

செல்வமே என் ஜீவனே

எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே

எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே

ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்

உன் அழகு முகம் கண்டு கொண்டால்

அன்பு கொண்டு மாறும்

அன்பு கொண்டு மாறும்

அன்பு கொண்டு மாறும்

ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்

உன் அழகு முகம் கண்டு கொண்டால்

அன்பு கொண்டு மாறும்

அன்பு கொண்டு மாறும்

அன்பு கொண்டு மாறும்

செல்வமே எங்கள் ஜீவனே

எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே

தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்

வில்லேந்தும் வீரன் போலவே

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்

வில்லேந்தும் வீரன் போலவே

மகனே நீ வந்தாய்

மழலை சொல் தந்தாய்

வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

மகனே நீ வந்தாய்

மழலை சொல் தந்தாய்

வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

ஓஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

ஓஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்