நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : கண்ணில் தெரியும் கதைகள் 

பாடல் : நான் ஒரு பொன்னோவியம்

எழுதியவர் : புலமைப்பித்தன் 

பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,எஸ். ஜானகி மற்றும் மற்றும் பி. சுசீலா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : நான் ஒரு பொன்னோவியம்

கண்டேன் எதிரே

பெண் குழு : இளமை……இளமை……இனிமை

இது புதுமை


ஆண் : நான் ஒரு பொன்னோவியம்

கண்டேன் எதிரே

போதை தரும் நாதஸ்வரம்…..

பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ…..

பார்வையில் ஆயிரம் கவிதைகள்

எழுதிடும் அபி நயம்….


ஆண் : நான் ஒரு பொன்னோவியம்

கண்டேன் எதிரே

பெண் குழு : இளமை……இளமை……இனிமை

இது புதுமை


ஆண் : பார்வை அழைப்பதும்

பாவை தவிப்பதும்

ஏனடி ஏனடி பைங்கிளியே…..

குழு : ஆஅ……ஆஅ……ஆஅ…..

ஆண் : பார்வை அழைப்பதும்

பாவை தவிப்பதும்

ஏனடி ஏனடி பைங்கிளியே…..


பெண் : மேகலை வாட்டியது

அதை மேனியில் காட்டியது


ஆண் : சிறு ஊடல் விளையாடல்

ஒரு கூடல் உறவாடல்

குறி போடல் சுவை தேடல் கவி பாடல்

புதுவித அனுபவமே


பெண் : அறிமுகம்…..அனுபவம்…..அது சுகம்

அழகன் மடியில் எனது உலகம்


பெண் : நான் ஒரு பொன்னோவியம்

கண்டேன் எதிரே

பெண் குழு : இளமை……இளமை……இனிமை

இது புதுமை


குழு : ………………………………..


பெண் : மாலை வரும் வரும்…….

மாலை தரும் தரும்…..

மாவிலை பின்னிய தோரணங்கள்……

மாலை வரும் வரும்…….

மாலை தரும் தரும்…..

மாவிலை பின்னிய தோரணங்கள்……


ஆண் : மங்கல வாத்தியங்கள்

எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்….

பெண் : ஒரு வானம் கரு மேகம்…..

மழை போலும் மலர் தூவும்

மயில் ஆடும் குயில் கூவும்

இவை யாவும் திருமண எதிரொலிகள்…..


குழு : முதல் முதல் இரவென்ன வருவது

மகிழ மனது நெகிழ வருக


ஆண் : நான் ஒரு பொன்னோவியம்

கண்டேன் எதிரே

பெண் குழு : இளமை……இளமை……இனிமை

இது புதுமை


குழு : ………………………………….


ஆண் : தந்தோம் தனம் தனம்…

தந்தோம் தனம் தனம்

என்றொரு மெல்லிசை கேட்பதென்ன….

தந்தோம் தனம் தனம்…

தந்தோம் தனம் தனம்

என்றொரு மெல்லிசை கேட்பதென்ன….


ஆண் : அது என்ன நூதனமோ……..

உங்கள் ஆசையின் சாதனமோ……

அது என்ன நூதனமோ……..

உங்கள் ஆசையின் சாதனமோ……


ஆண் : மனம் தந்தும் தனம் தந்தும்

இதழ் சிந்தும் ரசம் தந்தும்

தரும் இன்பம் பல தந்தும்

வரும் சொந்தம் இவள் சீதனமோ


பெண் : பலவித சுகங்களின் தரிசனம்

விழியும் மனமும் உருக வருக


ஆண் : நான் ஒரு பொன்னோவியம்

கண்டேன் எதிரே

பெண் குழு : இளமை……இளமை……இனிமை

இது புதுமை


ஆண் : போதை தரும் நாதஸ்வரம்…..

பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ…..

பெண் : பார்வையில் ஆயிரம் கவிதைகள்

எழுதிடும் அபி நயம்…


ஆண் : நான் ஒரு பொன்னோவியம்

கண்டேன் எதிரே

பெண் குழு : இளமை……இளமை……இனிமை

இது புதுமை

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்