விழிகளிலே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:குள்ளநரி கூட்டம்

ஆண்டு:2011

இசை:செல்வ கணேஷ்

வரிகள்: நா.முத்துகுமார்

பாடியவர்கள்: சின்மயி & கார்த்திக்

✨✨✨✨✨✨✨✨✨

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே...

இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...

இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...

நடந்து போகையில் பறக்குது மனது

துன்பத்தில் இது

என்ன வகை துன்பமோ

நெருப்பில் எரிவதை உணருது வயது

இது வரையில் எனக்கு இது போல் இல்லை

இருதய அறையில் நடுக்கம்

கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை

புதிதாய் இருக்குது எனக்கும்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே ..

சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ

இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்

மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ

இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்

இது என்ன கனவா நிஜமா

இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்

இது என்ன பகலா இரவா

இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே...

விழிகளிலே விழிகளிலே....

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்