காலை நேரப் பூங்குயில்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அம்மன் கோவில் கிழக்காலே

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : 

இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : ஆஹா ஆஹா

ஆஆஆ ஆஆஆ ஆஹா

ஆஹா ஆஆஆ

பெண் : காலை நேரப்

பூங்குயில் கவிதை பாட

போகுது கலைந்து போகும்

மேகங்கள் கவனமாக கேட்குது

கேட்ட பாடல் காற்றிலே

கேள்வியாக போகுமோ

எங்கே உன் ராகம் ஸ்வரம்

ஆஆஹா

பெண் : காலை நேரப்

பூங்குயில் கவிதை பாட

போகுது

பெண் : மேடை போடும்

பௌர்ணமி ஆடி பாடும்

ஓர் நதி மேடை போடும்

பௌர்ணமி ஆடி பாடும்

ஓர் நதி

பெண் : வெள்ள ஒளியினில்

மேகலை மெல்ல மயங்குது

என் நிலை புதிய மேகம்

கவிதை பாடும் புதிய மேகம்

கவிதை பாடும்

பெண் : பூபாளம் பாடாமல்

எந்தன் காலை தோன்றும்

எந்நாளும்

பெண் : காலை நேரப்

பூங்குயில் கவிதை பாட

போகுது கலைந்து போகும்

மேகங்கள் கவனமாக கேட்குது

ஆண் : இளமை என்னும்

மோகனம் இணைந்து

பாடும் என் மனம்

பெண் : இளமை என்னும்

மோகனம் இணைந்து

பாடும் என் மனம்

ஆண் : பட்டு விரித்தது

புல்வெளி

பெண் : பட்டு தெறித்தது

விண்ணொளி

ஆண் : தினமும் பாடும்

எனது பாடல் தினமும்

பாடும் எனது பாடல்

ஆண் : காற்றோடும்

ஆற்றோடும் இன்றும்

என்றும் கேட்கும்

என்றென்றும்

பெண் : காலை

நேரப் பூங்குயில்

ஆண் : கவிதை பாட

போகுது

பெண் : கலைந்து

போகும் மேகங்கள்

ஆண் : கவனமாக கேட்குது

பெண் : கேட்ட

பாடல் காற்றிலே

ஆண் : கேள்வியாக

போகுமோ

பெண் : எங்கே

ஆண் : உன் ராகம்

பெண் : ஸ்வரம்

ஆண் : ஆஹா

ஆண் : காலை

நேரப் பூங்குயில்

கவிதை பாட

போகுது

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்