சிவமயமாக தெரிகிறதே சிந்தையில்

 

ஐந்தான முகம் எதிரில்

அருள் பொழியுதே

அணலான மலை காண

மனம் குளிருதே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே

எனது விழிகளில் காணும் பொழுதிலே

மாறிடுதே மனம் ஊறிடுதே

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

யுகம் நான்கு தாண்டியே

முகம் வேறு காட்டியே

யகம் யாவும் ஆள்கின்ற

அருணாச்சலா

யுகம் நான்கு தாண்டியே

முகம் வேறு காட்டியே

யகம் யாவும் ஆள்கின்ற

அருணாச்சலா

சத்தியம் நீதான்

சகலமும் நீதான்

நித்தியம் என்னில்

நிலைப்பவன் நீதான்

அருணாச்சலா உனை நாடினேன்

அருணாச்சலா உனை நாடினேன்

சிவ லீலை செய்யாமல்

சிறுஏனை ஆட்கொள்ள

சிறுதேனும் தயவோடு

அருள்வாயப்பா

சிறுதேனும் தயவோடு

அருள்வாயப்பா

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

முடி மீது தீபமாய்

மடி மீது ஜோதியாய்

அடிவாரம் வெம்மையாய்

உணை காண்கிறேன்

முடி மீது தீபமாய்

மடி மீது ஜோதியாய்

அடிவாரம் வெம்மையாய்

உனை காண்கிறேன்

தீயெனும் லிங்கம்

ஜோதியில் தங்கும்

பாய்ந்திடும் சுடராய்

வான்வெளி தொங்கும்

அருணாச்சலா உன் கோலமே

அருணாச்சலா உன் கோலமே

மனம் காண வர வேண்டும்

தினந்தோறும் வரம் வேண்டும்

மலையான நாதனே

அருள்வாயப்பா

மலையான நாதனே

அருள்வாயப்பா

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே

எனது விழிகளில் காணும் பொழுதிலே

மாறிடுதே மனம் ஊறிடுதே

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமுலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்