மங்கலத்து குங்குமப் பொட்டு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:சாமி போட்ட முடிச்சு 

ஆண்டு : 1991 

பாடியவர்:K.S.சித்ரா 

இசை: இளையராஜா வரிகள்: வாலி 

✨✨✨✨✨✨✨✨✨

மங்கலத்து குங்குமப் பொட்டு

வந்ததென்ன நெத்தியைத் தொட்டு

இந்தக் கோலம் அந்த சாமி சம்மதமா

இந்த நேரம் நல்ல காதல் சங்கமமா

அந்தி வானத்து மேகங்களே

வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

அந்தி வானத்து மேகங்களே

வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

மங்கலத்து குங்குமப் பொட்டு

வந்ததென்ன நெத்தியைத் தொட்டு

நேற்றென்னை வாட்டியது

ராத்திரி வெண்ணிலவு

இன்றென்னை வாழ்த்தியது

நான் ஒரு பெண் நிலவு

யாரிடத்தில் சொல்வதென்று

ஓரிடத்தில் தவித்தேன்

வேறிடத்தில் தெய்வம் வந்து

உதவும் என்றா நினைத்தேன்

எல்லா நல்ல நேரம்

அது முன்னால் வந்து கூட

தன்னால் வந்த காளை

இரு கண்ணால் மாலை போட

அதை நானும் பேச வார்த்தை இல்லையம்மா

பெண்ணின் நாணம் கூட காதல் தொல்லையம்மா

அந்தி வானத்து மேகங்களே

வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

அந்தி வானத்து மேகங்களே

வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

மங்கலத்து குங்குமப் பொட்டு

வந்ததென்ன நெத்தியைத் தொட்டு

இந்தக் கோலம் அந்த சாமி சம்மதமா

இந்த நேரம் நல்ல காதல் சங்கமமா

அந்தி வானத்து மேகங்களே

வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

அந்தி வானத்து மேகங்களே

வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

வசந்தத்தின் காலம் அது

வாசலைத் தேடி வந்து

இலையுதிர் காலம் இனி

இல்லை என்று கூறியது

பொய்கை எல்லாம் பூ மலர

கைகளினால் பறித்தேன்

ஆசை எனும் நூலினிலே

அழகழகாய் தொடுத்தேன்

மாலை கொள்ளும் கண்ணன் இன்று

வந்தான் அந்த மன்னன்

இனி கொள்ளை கொள்ளை இன்பம்

இங்கு பொங்கும் நல்ல அன்பும்

அதை நானும் பேச வார்த்தை இல்லையம்மா

பெண்ணின் நாணம் கூட காதல் தொல்லையம்மா

அந்தி வானத்து மேகங்களே

வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

அந்தி வானத்து மேகங்களே

வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

மங்கலத்து குங்குமப் பொட்டு

வந்ததென்ன நெத்தியைத் தொட்டு

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்