ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் :  மனிதனின் மறுபக்கம் 

வரிகள் :  வைரமுத்து

பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….

ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….

ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா

மௌனமே கேள்வியா……

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஆண் : {நேற்று பார்த்த பார்வையோ

கேள்வி கேட்டு பார்த்தது

ஐயம் தீர்ந்து போனதால்

அன்பு நீரை வார்த்தது} (2)

ஆண் : பாறை மனதில் பாசம் வந்தது

பந்தம் வந்த பின்னே

ஒரு பாசம் வந்ததென்ன

கண்டு கொண்ட பின்னே

அடி கண்ணில் ஈரம் என்ன

விதி என்ன விடை என்ன

இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா

மௌனமே கேள்வியா…..

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….

ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….

ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….

ஆண் : {கால தேவன் ஏட்டில் அன்று

பக்கம் மாறி போனது

உண்மை வந்து சாட்சி சொல்ல

இன்று நன்மை சேர்ந்தது} (2)

ஆண் : ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது

போதும் துன்பம் போதும்

இனி பூக்கள் தோன்றும் மாதம்

காலம் உண்மை கூறும்

மனக் காயம் இங்கு ஆறும்

இரு கண்ணில் மழை வெள்ளம்

அது மௌனத்தாலே நன்றி சொல்லும்

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா

மௌனமே கேள்வியா…..

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்