மணி ஓசை கேட்டு எழுந்து

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : பயணங்கள் முடிவதில்லை

வரிகள்: முத்துலிங்கம்

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோயிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

கண்ணன் பாடும் பாடல் கேட்டு

ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்…ஹா…

பேசக் கூடாதோ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு

ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்

பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ

கண்ணன் முகம் வாடலாமோ

வாழ்க்கை மாறுமோ

நெஞ்சம் தாங்குமோ

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பாதை மாறிப் போகும்போது

ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது…ஆ..

ராகம் தோன்…

பாதை மாறிப் போகும்போது

ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது

ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே

ராகம் அதில் மாறும் அங்கே

காலம் மாறுமோ

தாளம் சேருமோ

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோயிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து...

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்