ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : பூவரசன்  

வரிகள் :  வாலி  

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ஆண் : செந்தாழம் பூவே

சிறுகூடல் முத்தே

முத்துப்பூ சூடிக்கொள்ளூம்

நாள் சொல்லடி

பெண் : ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

குழு : ……………………………

ஆண் : ஏரிக்கரை காத்தப்போல

என் மனசு லேசாச்சு

ஏறி நின்னு உந்தன் மேல

ஆசை கொண்டு அலையாச்சு

பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக

காத்திருக்கும் ராசாவே

தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு

என் மனசு லேசாவே

ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல

முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே

பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா

நீதானே எந்தன் கோமானய்யா

பெண் : ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை

ஆசையோடு பார்த்தேனே

கொஞ்சி வந்த நாதஸ்வர

ஒசை ஒன்று கேட்டேனே

ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா

மணவறையில் பார்த்தாயா

உன்னை என்னை ஜோடியாக்கி

ஒன்றில் ஒன்று சேர்த்தாயா

பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை

நாளாகும் போது பெருகுது ஆசை

ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும்

மாறாமல் நம்மை கை சேர்க்கணும்

ஆண் : ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

பெண் : செந்தாழம் பூவே

சிறுகூடல் முத்தே

முத்துப்பூ சூடிக்கொள்ளூம்

நாள் சொல்வா

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி

பெண் : உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி

பெண் : உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்