தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் :  சொல்ல துடிக்குது மனசு 

வரிகள் : வாலி 

பாடகர்: மனோ

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

இன்பம் ஏன் என்னை வாட்டுது

ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னை தேடுது…..

ஆண் : தேவலோக தேரில்

இவள் பாரிஜாத பூவா

பாச தீபம் ஏந்தும்

ஒரு ஆசை பூவில் தானா

ஆண் : பாதம் முகம் போதும்

ஒரு போதை வலை வீசும்

கூந்தல் ஒரு வானம்

அது கோடை மழை மேகம்

ஆண் : யாரடி நீ….

குழு : ஆஆஆஅ……

ஆண் : யாரடி நீ தேவதையா

கனவு உனது உடல் ஆனதே

காற்றினிலே பார்வைகளால்

கவிதை எழுதி வரும் பாவையே

தாய்மையின் வானம் ஆயிரம் காலம்

வளர வளரும் நிலவே…..

ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

இன்பம் ஏன் என்னை வாட்டுது

ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னை தேடுது…..

ஆண் : {மதன விழிகள் மயங்க மயங்க

ஆடட்டும் டும் டும்

இன்ப கனவு இங்கு வந்து வந்து

போகட்டும் டும் டும்} (2)

ஆண் : {உனது வதனம்

அமுதை பொழியட்டும்

எனது நினைவு

முழுதும் அழியட்டும்} (2)

ஆண் : கம்பன் உன்னை பார்த்த போது

வார்த்தை இன்றி ஓடுவான்

கலங்கி கலங்கி பாடுவான்

கன்னித் தமிழை சாடுவான்

கவியரசன் தோற்றானே

குடி முழுதும் உனதடிமை….

ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

இன்பம் ஏன் என்னை வாட்டுது

ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னை தேடுது…..

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்