சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பாட்டுப் பாடவா

ஆண்டு:1985

இசை:இளையராஜா

பாடியவர்:S.P.B,சுனந்தா

வரிகள்:வாலி

✨✨✨✨✨✨✨✨✨

ஆஆஆ.ஆஆஆ.ஆஆ

காக்கும் கரமுடைத்த

கருணை வடிவே ஏ.

கடும் துயரை

தாக்கும் தயவுடைய

தனிப் பொருளே ஏ ஆ

உரைக்கும் நிறைவாக்கும்

மனம் கடந்த வடிவருளே

அணுவிலும் உறை நீக்கமற நிறைந்த

நிலையருளே ஆஆஆஅஆஅ.

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே..

எந்தன் பெண்மணிக்குள்ளே வந்த

முத்து கண்ணனே

எந்தன் மாயக் கண்ணனே

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே

எந்தன் சின்னக் கண்ணனே

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே

எந்தன் சின்னக் கண்ணனே

நீண்ட காலத் தவமாய் நானே

வாங்கி வந்த வரம் நீ மானே

கண்ணே கண்ணே..

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே

எந்தன் சின்னக் கண்ணனே

வாழும் கோயில் தெய்வங்கள்

உன்னைக் காக்க வேண்டுமே

சூழும் நோய் காக்க வேண்டி

தீயைக் கூடத் தாண்டுமே

 வானம் போல வாழ்வெல்லாம்

வரும் என்று நம்பு

தெளிவாக நீ செல்வாய்

எதிர்க் காலம் உண்டு

மேகங்கள் மறைத்தாலும்

மெதுவாக விலகும்

வேளை வரலாம் மானே தேனே

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே

எந்தன் சின்னக் கண்ணனே

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே

எந்தன் சின்னக் கண்ணனே

செங்கோல் கொண்டு நாடெல்லாம்

அரசாளும் மன்னரும்

செல்வம் கல்வி யாவுமே

குறையாத மேதையும்

இசை கூட்டும் பாடகன்

ஈர்க்கின்ற நேரம்

தலையாட்டும் பொம்மையாய்

செவி சாய்க்க வேண்டும்

தாய் தந்த அருளாலே

நான் இன்று மேலே

பிறர் இன்று கீழே அம்மா அம்மா.

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே

எந்தன் சின்னக் கண்ணனே

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே

எந்தன் சின்னக் கண்ணனே

நீண்ட காலத் தவமாய் நானே

வாங்கி வந்த வரம் நீ மானே

கண்ணே கண்ணே..

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த

செல்லக் கண்ணனே

எந்தன் சின்னக் கண்ணனே (2)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்