புத்தம் புது மலரே என் ஆசை

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அமராவதி

ஆண்டு:1993

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : 

பால பாரதி

வரிகள்:வைரமுத்து

✨✨✨✨✨✨✨✨

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா பொத்தி

வைத்து மறைத்தேன்

என் பாஷை சொல்லவா

ஆண் : இதயம் திறந்து

கேட்கிறேன் என்னதான்

தருவாய் பார்க்கிறேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ

நினைத்தேன் நித்தம் நித்தம்

கற்பனைகள் வளர்த்தேன்

தவித்தேன்

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா

ஆண் : செல்லக் கிளி

என்னை குளிப்பிக்க

வேண்டும் 

சேலைத்

தலைப்பில் துவட்டிட

வேண்டும்

ஆண் : கல்லு சிலை

போலே நீ நிற்க

வேண்டும் 

கண்கள்

பார்த்துத் தலைவார

வேண்டும்

ஆண் : நீ வந்து 

இலை

போட வேண்டும் 

நான்

வந்து பரிமாற வேண்டும்

ஆண் : என் இமை

உன் விழி மூட வேண்டும்

இருவரும் ஒரு சுவரம்

பாட வேண்டும் 

உன்னில்

என்னைத் தேட வேண்டும்

ஆண் : புத்தம் புது

மலரே 

என் ஆசை

சொல்லவா

ஆண் : கன்னி உந்தன்

மடி சாய வேண்டும்

கம்பன் வரிகள் நீ

சொல்ல வேண்டும்

ஆண் : உன்னைக்

கட்டிக்கொண்டு தூங்க

வேண்டும் 

உந்தன் விரல்

தலை கோதிட வேண்டும்

ஆண் : கண்ணோடு

இதம் காண வேண்டும்

கண்ணீரில் குளிர் காய

வேண்டும்

ஆண் : உதட்டுக்கும்

உதட்டுக்கும் தூரம்

வேண்டும் 

உயிருக்குள்

உயிர் சென்று சேர

வேண்டும் 

தாயாய் சேயாய்

மாற வேண்டும்

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா 

பொத்தி

வைத்து மறைத்தேன்

என் பாஷை சொல்லவா

ஆண் : இதயம் திறந்து

கேட்கிறேன் என்னதான்

தருவாய் பார்க்கிறேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ

நினைத்தேன்

 நித்தம் நித்தம்

கற்பனைகள் வளர்த்தேன்

தவித்தேன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்