கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : உனக்காகவே வாழ்கிறேன் 

வரிகள் :  கங்கை அமரன் 

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல

காதல் என்னும் சொந்தம் கொள்ள

மாலை ஆனதே.. வேளை ஆனதே

மாலை ஆனதே.. வேளை ஆனதே

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல

காதல் என்னும் சொந்தம் கொள்ள

மாலை ஆனதே.. வேளை ஆனதே

மாலை ஆனதே.. வேளை ஆனதே

ஆண் : காதல் என்பது.. ஜீவனானது

தேவி கைகளில் தேவனானது

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல

காதல் என்னும் சொந்தம் கொள்ள

மாலை ஆனதே வேளை ஆனதே

மாலை ஆனதே வேளை ஆனதே

ஆண் : நாளும் எந்தன்

வானம் தன்னில்

காதல் என்னும் ஆனந்தம்

நாளை என்ற காலம் தன்னில்

கூடும் நாள் வரும்

பெண் : தேகம் என்ற

மேடை தன்னில்

நாடகங்கள் ஆரம்பம்

தேவியோடு தேவன் ஆடும்

ஜீவ காவியம்

ஆண் : கூடாமல் இனி நாளென்ன

நீ இன்றி இனி நான் என்ன

தூங்கவில்லையே தாங்கவில்லையே

கூறவில்லையே சேரவில்லையே..

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல

காதல் என்னும் சொந்தம் கொள்ள

மாலை ஆனதே வேளை ஆனதே

மாலை ஆனதே வேளை ஆனதே

பெண் : காதல் என்பது.. ஜீவனானது

தேவன் கைகளில் தேவியானது

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல

பெண் : காதல் என்னும் சொந்தம் கொள்ள

ஆண் : மாலை ஆனதே வேளை ஆனதே..

பெண் : மாலை ஆனதே வேளை ஆனதே..

ஆண் : தேவலோகம் தேவை இல்லை

இங்கு அந்த சொர்க்கங்கள்

தேவ பானம் தேவை இல்லை

போதும் முத்தங்கள்

பெண் : தேகம் என்ற மஞ்சம் தன்னில்

மோகம் என்ற முத்துக்கள்

மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன்

காதல் சொத்துக்கள்

ஆண் : ஏந்துங்கள் அதில் நீந்துங்கள்

மோகங்கள் பரிமாறுங்கள்

காணும் போதெல்லாம்

கூட வேண்டுமே

காதல் ராகமே பாட வேண்டுமே

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல

காதல் என்னும் சொந்தம் கொள்ள

மாலை ஆனதே.. வேளை ஆனதே

மாலை ஆனதே.. வேளை ஆனதே

காதல் என்பது ஜீவனானது

தேவன் கைகளில் தேவியானது

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல

காதல் என்னும் சொந்தம் கொள்ள

மாலை ஆனதே வேளை ஆனதே

மாலை ஆனதே வேளை ஆனதே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்