தென்றல் வரும் தெரு எது அது நீதானே திங்கள் உலா வரும் நிலா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : சிறையில் சில ராகங்கள்

வரிகள் :  மு மேத்தா

பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ் மற்றும்  கே.எஸ். சித்ரா

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

பெ: தென்றல் வரும் தெரு எது அது நீதானே

திங்கள் உலா வரும் நிலா முகம் நீ தானே

நான் பாடவா பிள்ளைத்தமிழ் உன் காதிலே..ஏ..

தேன் தூவுதே கன்னித்தமிழ்

என் வாழ்விலே..ஏ..

ஆ: தென்றல் வரும் தெரு எது அது நீதானே

ஆ: காலம் பார்த்து வந்ததே

கையில் வெண்புறா

காதல் கூடு தேடுதே

கண்ணில் பெண் புறா

பெ: கூடும் அது வீடாகுமா

ஏதோ ஒரு ஆசை

ஆசை கிளி நான் வாழவே

தேவை மணி ஓசை

ஆ: பூங்காற்றிலே கோலாகலம்

என் வீதியில் உன் ஊர்வலம்

தேர் மேலே

தென்றல் வரும் தெரு எது அது நீதானே

நான் பாடவா பிள்ளைத்தமிழ் உன் காதிலே

பெ: நீல வானில் மேகமே

எங்கே போகிறாய்

காதல் தேவி கேட்கிறாள்

கையில் ஓடி வா

ஆ: ஆகாயமும் நம் ஊஞ்சலாய்

ஆகும் ஒரு காலம்

பொன் வானவில் நம் வாசலில்

போடும் எழில் கோலம்

பெ: பூங்காற்றிலே நாளை தினம்

நாம் காணலாம் காதல் மனம்

வாராய் நீ

ஆ: தென்றல் வரும் தெரு எது அது நீதானே

திங்கள் உலா வரும் நிலா முகம் நீ தானே

பெ: நான் பாடவா பிள்ளைத்தமிழ்

உன் காதிலே.ஏ..

தேன் தூவுதே கன்னித்தமிழ்

என் வாழ்விலே..ஏ..

ஆ: தென்றல் வரும் தெரு எது அது நீதானே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்