பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் :  பொன்மனச்செல்வன் 

வரிகள் : கங்கை அமரன் 

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு

பொன்னான எழுத்தாலே

பெண் : ஆஹா பிரமாதம்…

ஆண் : கண்ணான கண்ணுக்கொரு

கடுதாசி போட்டேனே

பெண் : சபாஷ்… சபாஷ்…

ஆண் : ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு

ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு

பொன்னான எழுத்தாலே

கண்ணான கண்ணுக்கொரு

கடுதாசி போட்டேனே

ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு

ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

பெண் : ஏடாக என்னத் தொட்டு

எழுதுங்க பாட்டு ஒன்னு

நான் அதுக்காக காத்திருக்கேன்

ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால்

எழுத்துக்கு பஞ்சமில்லே

ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்

பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு

பூவென நெஞ்சு பூத்ததையா

ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன

கேட்டது தானா கெடச்சதம்மா

பெண் : அன்பாக என்னக் கொஞ்சம்

ஆதரிக்க வேணும்

ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள

பாத்திருக்கேன் நானும்

பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு

பொன்னான எழுத்தாலே

கண்ணான கண்ணுக்கொரு

கடுதாசி போட்டேனே

ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு

ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம்

புரியாத மக்குப் புள்ள

புரியிற நேரம் பொறந்ததம்மா

பெண் : பொன்னான ஓம் மனச

எப்போதோ புரிஞ்சுகிட்டேன்

புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்

ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம்

நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்

பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும்

வேலிய நான்தான் போட்டு வச்சேன்

ஆண் : பூவுக்கு வேலியிட்டா

வாசம் எங்கு போகும்

பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா

பொண்ணு ஒன்னச் சேரும்

ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா

பெண் : பூவான ஏட்டத் தொட்டு

பொன்னான எழுத்தாலே

கண்ணான கண்ணனோட

கடுதாசி கண்டேனே

ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன்

ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு

பொன்னான எழுத்தாலே

கண்ணான கண்ணுக்கொரு

கடுதாசி போட்டேனே

ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு

ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்